×

கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார் மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர், மார்ச் 17: திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீர்த் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2-வது குடிநீர்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் 17, 18 ஆகிய 2 நாட்கள் மின்சார வாரியத்தின் மூலம் மின் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, மாநகராட்சி 1வது மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண் 11, 13, 14, 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 44,45,50,51 மற்றும் 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 52, 55 ஆகிய பகுதிகளில் இன்றும் (17ம் தேதி), நாளையும் (18ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், 19ம் தேதி முதல் மேற்கண்ட பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vinith ,
× RELATED காதலியை கவரும் ஆசையில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது